Archive

Archive for the ‘வகைப் படுத்தாதவை’ Category

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது புதுவைத் தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் : தமிழோசை செய்தி

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது

புதுவை தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம்

புதுச்சேரி, பிப்.1- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை  சேர்க்க்க்கூடாது என்றும், 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் நேற்று முன்நாள் நடைபெற்ற தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நேற்று முன்நாள் வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.

தமிழோசை, 01-02-2011

உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.

தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

  • தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது என்பதோடு, 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும்
  • எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது
  • தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
  • இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்!

நேற்று (நவ.3, 2010) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம்,தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் பா.இறையரசன் தலைமைதாங்கிய இந்நிகழ்ச்சிக்கு அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரை யாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன் தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாடினார். கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் திரு நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன், வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன், பொறி.அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப் பலரும் தீர்மானங்களை வழி மொழிந்தனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

2. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணைய தளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. இப்பேராளர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில் இடம் பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள் இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

5. அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.

7. அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.

8. குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர் ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.

9. உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.

10. சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.

11. சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதேபோல் நல்ல தமிழில் வரும் இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றிஅரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.

12. நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

13. இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும் பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில் இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல் இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.

தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம் பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே இணையத்தளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.

தொடக்கவுரையில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார். அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய திரு இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று நடைபெற உள்ள ஒருங்குறிக் கூட்டத்தில் கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்துநடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போக மாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.

பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.

அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்.

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு 16, மே 2010, புதுச்சேரியில்

தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் என புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் கருதுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து  மாநாடு ஒன்றை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே மே மாத தொடக்கத்தில் நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், பொருத்தமான இடம் கிடைக்காமல் போனதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  வரும் மே மாதம் 16 ஆம் நாள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடத்தலாம் என கருதியுள்ளோம்.

இந்த நிகழ்வில் இதுவரை கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இசைவளித்துள்ளனர்.

  1. 1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
  2. 2.திரு.இராம.கி, பொறியாளர், சென்னை,
  3. 3.திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (இணைய வழி உரை/ தொலைபேசி உரை)
  4. 4.திரு.மணி.மு.மணிவண்ணன், சென்னை
  5. 5.பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி,
  6. 6. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருத்துக்களை ஒலி/ஒளி வடிவத்தில் பதிவு செய்ய இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

நூல் வெளியீடு: தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூல் வெளியிடப்படும்.

தொகுப்பு: இரா.  இளங்குமரனார்.

இந்த நிகழ்வில்  மேலும் சில தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள், மொழி அறிஞர்கள், நேரில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க இருக்கிறார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825

4. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? – கருத்தரங்கம் – ஓர் அறிக்கை

5. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தமிழ்மணம்

1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – தமிழ்மணத்தின் நிலைப்பாடு

நாக.இளங்கோவன் அவர்களின்

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி 1

2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி 2

3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-3

4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-4

5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-5

6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-6

7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-7

8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-8

9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-9

10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-10/12

11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-11/12

12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-12/12

திரு. செல்வா – தமிழ்வெளி

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை – பங்கேற்போர் இறுதிப் பட்டியல்!-2007

அன்புடையீர், வணக்கம்.

“தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்பவர்களின் இறுதிப் பட்டியல் இது. இப்பட்டியலில் பெயர் இடம்பெற்று பட்டறையில் கலந்துக் கொள்ள முடியாதவர்கள் அருள்கூர்ந்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். பெயர் பதியாமால் பலர் வாய்ப்புக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஏதுவாக இருக்கும். பதிவு செய்து பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக தொடர்புக் கொள்ளவும்.

இறுதிப் பட்டியல்:

  1. திரு. பி.எஸ்.சந்திரமோன்,
  2. திரு. இரா.அ.அரசெழிலன்,
  3. திரு. மா.தமிழ்ப்பரிதி,
  4. திரு. கே. இராஜா,
  5. முனைவர் தி. நெடுங்செழியன்,
  6. திரு. செல்வமுத்துக்குமரன்,
  7. திரு. விக்ரம்,
  8. திரு. முத்துசிவகுமரன்
  9. திரு. என்.குமார்,
  10. தனலட்சுமி,
  11. எம்.ஆர்.மல்லிகா,
  12. முனைவர் எம்.இ.கிருஷ்ணகுமார்,
  13. முனைவர் எ.மணி,
  14. முனைவர் வி.மணி,
  15. திரு. சிவனந்தம்,
  16. திரு. டைடஸ்ராஜ்,
  17. திரு. எம்.இராமலிங்கம்,
  18. திரு. பாலு இரங்கநாதன்,
  19. திரு. எஸ்.பக்கிரிசாமி,
  20. திரு. இ.எழில்வசந்தன்,
  21. திரு. அருண்,
  22. திரு. எஸ்.சிவானந்தம்,
  23. திரு. எஸ்.சீனிவாசன்,
  24. சாந்தி,
  25. திரு. சையது முஸ்தபா,
  26. திரு. வைகை இராமலிங்கம்,
  27. மாலா ஜெயந்தி,
  28. திரு.ஜெயராமன்,
  29. திரு.கீழைஇலக்கியன்,
  30. திரு.வெங்கடேசன்,
  31. திரு.ஆர்.மணி,
  32. திரு.விஸ்வநாத்,
  33. திரு.டி.ஆர்.இராமலிங்கம்,
  34. திரு.இரா.முத்துராஜ்,
  35. திரு.ஆர்.ஆர்.இராஜ்குமார்,
  36. திரு.மு.பாலசுப்பிரமணியன்,
  37. திரு.சு.சண்முகசுந்தரம்,
  38. திரு.கோ.செழியன்,
  39. மேகலா செழியன்,
  40. திரு.எஸ்.சுவாமிநாதன்,
  41. திரு.இளையபாரதி,
  42. திரு.கணேஷ்,
  43. திரு.நீலவேந்தன்,
  44. திரு.எஸ்.ஆதிசங்கர்,
  45. கே.பழனிவேலு,
  46. தமிழ்ச்செல்வி புரூடஸ்,
  47. ஏ. பிரேமா ஆதிசங்கர்,
  48. எம்.இராஜாமணி,
  49. இராஜலட்சுமி,
  50. திரு.த. தண்டபாணி,
  51. திரு.அ.புகழேந்தி,
  52. திரு. தி.திருநாவுக்கரசு,
  53. திரு. சு.பாலசுந்தரம்,
  54. திரு. டி.இரவிசங்கர்,
  55. ஆர்.வித்யா,
  56. திரு. பி.கார்த்திக் ,
  57. திரு. சுந்தரமுருகன்,
  58. திரு. புதுவை யுகபாரதி,
  59. திரு. பா.திருநாவுக்கரசு,
  60. எம்.எஸ்.காந்திமேரி,
  61. மூ.சத்யா,
  62. ச.சிவப்பிரியா ,
  63. செ.சிவசங்கரி,
  64. நா.குணசுந்தரி,
  65. ஆ.தீபிகா,
  66. இரா.சானகி,
  67. இரா.கலைவாணி,
  68. தே.ஜெயந்தி,
  69. க.இரேவதி,
  70. முனைவர் இரத்தின புகழேந்தி,
  71. சி.கீதா,
  72. எ.கலைச்செல்வி,
  73. கே.இராஜகுமாரி,
  74. எ.சந்திரகலா
  75. எம்.சுபாஷினி,
  76. எம்.வெங்கடேசன்,
  77. திரு.சீ.சந்திரசேகரன்,
  78. திரு.பி.குழந்தைசாமி,
  79. திரு.வெங்கடேசபெருமாள்,
  80. திரு.ஜெ.பகிரதன்,
  81. திரு.ஜெயராஜ் தனியேல்,
  82. திரு.சுந்தர கலிவரதன்,
  83. திரு.ஆர்.சேகர் ,
  84. திரு.கே.குணசேகரன்,
  85. திரு.முருகதாஸ்,
  86. திரு.தமிழநம்பி,
  87. திரு.எழில் இளங்கோ,
  88. திரு.கோ.தாமரைக்கோ,
  89. திரு.சிவ.இளங்கோ,
  90. திரு.யாழினி சந்திரசேகர்,
  91. பேராசிரியர் உரு.அசோகன்,
  92. திரு.கமலச்செல்வம்,
  93. திரு.மு.சின்னமருது,
  94. திரு.மோசஸ்,
  95. திரு.பூராசாமி,
  96. திரு.செந்தமிழினியன்,
  97. திரு.அருணன்,
  98. திரு.ச.குணசேகரன்,
  99. திரு.சி,சேகர்,
  100. திரு.கலைச்செழியன்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். கிராம அளவில் சிறு சிறு குழுக்களாக அமைத்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இரா.சுகுமாரன்,

ஒருங்கிணைப்பாளர்,

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,

உலாபேசி: + 91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இப்பட்டறை சிறப்பாக நடைபெற புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் உதவ முன்வந்துள்ளார்.

சற்குரு உணவக அரங்கம் மற்றும் உணவு ஆகியவற்றின் செலவுகளைத் தன் பொறுப்பில் செய்ய உறுதி அளித்துள்ளார். பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஹோப்” நிறுவனத்திற்கு நன்றி!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் “ஹோப்” நிறுவனம் ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.

பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஹோப்” நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!